Wednesday 3 September 2014

WHY கோமாத IS OUR குலமாதா?

WHY கோமாத IS OUR குலமாதா????

நாட்டு பசுவின் மகிமை:

ஏதேனும் ஒரு சில காரணங்களால் நம் வீட்டிலோ அல்லது தோட்டத்திலோ வளரும் மரத்தின் கிளைகளை அகற்ற நேர்ந்தால் அதை மீண்டும் துளிர் விட செய்ய நாட்டு பசு சாணம் கொண்டு பூசி வைக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அந்த மரங்களை கிருமிகள் தொற்றிலிருந்து காப்பாற்றிவிடலாம்..


WHY கோமாதா IS குலமாதா?

சொட்டு நீர்க்குழாய் அடைப்புக்குத் தீர்வு!

சொட்டு நீர்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் அத்தனை விவசாயிகளுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்னை சொட்டு நீர்க் குழாய்களில் உப்பு அடைப்பு. இதை சரி செய்வதற்கு சொட்டு நீர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் 'சல்பியூரிக் ஆசிட்’டைதான் பயன்படுத்தச் சொல்கின்றனர். அந்த ஆசிட் பயிர்களில் படும்போது, பயிர் கருகி போய்விடுகிறது. 

இந்தப் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ...

ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கும் சொட்டு நீர்க் குழாய்களுக்கு 20 லிட்டர் தண்ணீரில், 10 லிட்டர் நாட்டு பசு சிறுநீரைக் கலந்துகொள்ள வேண்டும். பாசனம் செய்து முடிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, உரம் செலுத்தும் குழாய் வழியாக இந்தக் கரைசலைச் செலுத்தி, ஐந்து நிமிடம் மட்டும் ஓடவிட்டு மோட்டரை நிறுத்திவிட வேண்டும். மீண்டும் 24 மணி நேர இடைவெளி கொடுத்து, எல்லா கேட் வால்வுகளையும் திறந்துவிட்டு பாசனம் செய்தால், சொட்டு நீர்க் குழாயில் இருக்கும் அடைப்புகள் முழுக்க வெளியேறிவிடும்.

No comments:

Post a Comment