Wednesday 3 September 2014

கோயில்களுக்கே பசுக்கள் தான் ஆதாரம்


கோயில்களுக்கே பசுக்கள் தான் ஆதாரம். நாட்டுப்பசுக்கள் கோயில் கருவறையை தீர்மானிக்கும் சக்தி படைத்தது. ஆலயம் என்று சொல்வதே “ஆ+லயம்” அதாவது பசு தன்னை மறந்து லயித்து நின்ற இடம் என்ற பொருளில் தான். நாட்டுப்பசுவுக்கு இங்கே ஏன் முக்கியத்துவம் என்றால், பசுவும் கோயிலும் வெவ்வேறு அல்ல என்பதே. பசுவின் வீடே கோ+யில். பசுவின் திமில்தான் கோ+புரம் என்பது. இந்த திமில் மூலம் நாட்டுப்பசு தனது சூரிய கேது நாடியைக் கொண்டு காஸ்மிக் சக்தியை கிரகிப்பது போலவே கோபுரங்களும் காஸ்மிக் சக்தியை தனது செம்பு கலசங்கள் வாயிலாக இழுத்து உள்ளே தருகின்றன. தர்ப்பை, வரகு போன்ற அதிக மின்னோட்டத்தை தடுக்கும் வஸ்துக்களும் சேர்க்கப்படுகின்றன. ஆதிநாளில் பல கோயில்கள் இன்றைய கிராம கோயில்கள் போல கல்கட்டு கோயில்களாக இருந்தன. அவையெல்லாம் பசுக்கள் கட்டிய இடங்களே. ஒரு கிராம நிர்மானத்தின்போது பசுக்கள் தங்கிய இடங்களே கோயில்களாக உருப்பெற்றன. எனவே கருவறை என்பது மிக மிக முக்கியமான ஒன்று.

பசுவை தொழும் இடம் என்னும் பொருளில் வந்ததுதான் தொழுவம் என்னும் பேர். கோயில் என்பது கோ+இல், ஆலயம் என்பது ஆ+லயம் என ஆன்மீகத்தின் அடிப்படைகள் அனைத்தும் பசுவை சுற்றியே உள்ளன.

http://www.karikkuruvi.com/2014/08/blog-post_18.html

No comments:

Post a Comment