Wednesday 3 September 2014

ஆடித்தபசு

ஆடித்தபசு!!!!!!!

பசுக்கள் பாதுகாக்கப்படும் நாட்டில், செல்வச்செழிப்பு மிகுந்திருக்கும். அதனால் தான், தானங்களில் உயர்ந்த தானமாக, பசு தானத்தைக் குறிப்பிடுகின்றனர். 
ஒரு குழந்தை பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. தாய்ப்பால் வற்றிப்போனால், அதன் உயிரைக் காப்பது பசுவின் பால். மனித வாழ்வின் துவக்கத்தில் மட்டுமல்ல, அது முடிந்த பின்னும் பால் ஊற்றுகின்றனர். இப்படி வாழ்க்கை முழுவதும் நம்மோடு வருவது பசு. 

இதனால் தான், சிவனை, பசுபதி என்றும், அம்பாளை கோமதி என்றும் சொல்கின்றனர். ‘கோ’ என்றால், பசு.
அம்பாள் கோமதி, பூலோகம் வந்து, உலக நன்மை கருதி தபஸ் (தவம்) இருந்தாள். ‘தபஸ்’ என்பதே பின்னாளில், தபசு ஆனது. இந்த தபசுக் காட்சி, ஆடிமாதம் பவுர்ணமியை ஒட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலிலும், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்திலுள்ள தெற்கு சங்கரன்கோவிலிலும் விமர்சையாக நடைபெறுகிறது.
இப்பகுதியில் வசித்த, ஒரு சிவபக்தர் உஞ்சவிருத்தி (தானம்) பெற்று வாழ்ந்து வந்தார். தினமும் காகங்களுக்கு சாதம் வைத்தபின், சாப்பிடுவது அவர் வழக்கம். அவ்வாறு சாதம் வைக்கும் போது, ஒரு காகம் மட்டும், சாதத்தை எடுத்து, குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு, பறந்து செல்வதை பார்த்தார். தினமும் அந்தக் காகம் அவ்வாறு செய்வதை கவனித்த சிவபக்தர், அங்கு சென்று பார்த்தார். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. அதற்கு பூஜை செய்து வழிபட்ட சிவபக்தர் அங்கேயே தங்கி விட்டார். இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரிய வரவே, அவரைச் சென்று பார்த்தனர். அப்போது, சிவலிங்கத்தில் ஐக்கியமாகி விட்டார் பக்தர். அதனால், அதற்கு, ‘சங்கரலிங்கம்’ என, பெயர் சூட்டினர். பின், அவ்விடத்தில் கோவில் எழுப்பினர்.

இந்த இடத்தில் தான், அன்னை உமையவள், தவமிருந்தாள். அவள் பிரகாசமான முகமுடையவள். எனவே, அன்னையை, கோமதி என்றனர். அவளை தரிசிக்க தேவர்கள், பசுக்களாக மாறி வந்தனர். அந்த பசுக்களை காத்தமையால், ஆவுடையம்மாள் என்றும் அழைக்கப்படுகிறாள்.

இந்த லிங்கத்தின் முன்புறம் ராகு, இடது புறம் கேது என, இரு நாகங்கள் உள்ளன; நாகதோஷம் உள்ளவர்களுக்கு இது பரிகாரத்தலம்.

தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ இத்தலம் அமைந்துள்ளது. இந்த புண்ணிய நதியில் நீராடினால், பாவங்கள் தொலையும். அன்னையின் தபசுக் காட்சி நதிக்கரையில் நடைபெறுகிறது. இந்த நல்ல நாளில், பசுக்களை பாதுகாக்கும் வகையில் உதவிகளை வழங்கினால், குடும்பம் வாழையடி வாழையாக செல்வச் செழிப்புடன் திகழும்; தீர்க்காயுள், தீர்க்கசுமங்கலி பாக்கியமும் கிடைக்கும்

No comments:

Post a Comment