Thursday 31 October 2013

100% மானியத்தில் உம்பலச்சேரி நாட்டு பசுக்கள்



மண்ணின் வளம், தட்ப வெப்பம், அங்கு விளையும் தீவனங்கள் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்ட இன மாடுகளை, நம் முன்னோர் வகைப்படுத்தி வளர்த்து வந்தார்கள். அந்தந்த மாடுகள் வளரும் பகுதிகளை வைத்தே காங்கேயம், மணப்பாறை, உம்பளாச்சேரி என பெயரிட்டு அழைத்தார்கள்! ஆனால், கலப்பின மாடுகளின் வருகைக்கு பிறகு, பாரம்பரிய இனங்களுக்கு கலப்பினக் காளைகளின் உறைவிந்து செலுத்தப்பட்டு பாரம்பரிய இனங்களின் தனித்துவம்.. அழிய ஆரம்பித்துவிட்டது. இத்தகையக் கொடுஞ் சூழலிலும்.. பாரம்பரிய இனங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வரும் விவசாயிகள் தமிழகம் முழுக்கவே ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், காவிரி டெல்டா பகுதியின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான ‘உம்பளாச்சேரி’ இன மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கி, பாதுகாத்து வருகிறார்கள் நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களின் எல்லையோரத்திலுள்ள உம்பளாச்சேரி, கொருக்கை கிராம மக்கள். உம்பளாச்சேரி மாடுகளின் மகத்துவத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால், அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சென்று, இந்த இனத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வரும் இப்பகுதி விவசாயிகள், பெரும்பாலும் உம்பளாச்சேரி ரக மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இப்படித்தான் இருக்கும் உம்பளாச்சேரி!
இதைப் பற்றி பெருமையோடு பேசிய, ‘உம்பளாச்சேரி பாரம்பரிய கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் தீனதயாளன், இந்த பகுதியில் இயற்கையாகவே ‘உப்பளப்புல்’ என்ற  ஒரு வகையான புல் அதிகமாக வளர்ந்திருக்கும். இதை ‘உப்பள் அருகு’ என்று சொல்லுவாங்க. இதுதான் மருவி உப்பளச் சேரி என்று மாறி .. கடைசியில் ‘உம்பளாச்சேரி’ என்று வந்து நிற்கிறது. அதுவே எங்க ஊருக்கும், இந்த பகுதி மாட்டிற்கும் பெயராகிவிட்டது. இந்த மாடுகளை, தெற்கத்தி மாடு, மோழை மாடு, மொட்டை மாடு, தஞ்சாவூர் மாடு எனும் பல பெயர்களில் சொல்லுவாங்க. நெத்தி வெள்ளை, வால்வெள்ளை, கால் வெள்ளை என்பதுதான் இந்த மாடுகளோட அடையாளம். அதாவது.. நெற்றியில் வெள்ளை கலரில் நட்சத்திர வடிவம் இருக்கும். வாலோட நுனிப்பகுதி முழுசுமாகவோ, ஒரு பகுதி மட்டுமோ... நல்ல வெள்ளை கலரில் இருக்கும். காலில் குளம்பிற்கு மேலே வெள்ளை நிறத்தில் வளைய அடையாளம் இருக்கும். குட்டையான, கூர்மையான கொம்பு, குட்டையாக படுக்கை வசமான காது மடல், சின்னதாக அழகாக இருக்கும் அலை தாடி, குட்டையாக இருந்தாலும் பலமாயிருக்கும் கால்கள், சின்னக் குளம்பு, குட்டையான வால், சின்னதாக அதிக இடைவெளியில் இருக்கும் பால் காம்பு, இதுதான் ஒரிஜினல் உம்பளாச்சேரி மாடுகளின் அடையாளம் என நுட்பமாக பட்டியலிடும் தீனதயாளனிடம் 25 உம்பளாச்சேரி மாடுகள் இருக்கின்றன.

தீவனச்செலவே இல்லை!
இதே சங்கத்தைச் சேர்ந்த கொருக்கை பகுதிக்கான தலைவர் ஜானகிராமன், உம்பளாச்சேரி இன மாடுகளுக்குள்ளேயே ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, கணபதியான் மாடு என்று பல உட்பிரிவு இருக்கு. ஆனால்.. இப்ப எங்களால் அதை தெளிவாக அடையாளப்படுத்திச் சொல் முடியவில்லை. இந்த மாடுகளுக்கு தீவனச் செலவே கிடையாது. முழுக்க முழுக்க மேய்ச்சல் மட்டும்தான். ஆனாலும் கூட, மனசு கேக்காமல், தினமும் ஒரு மாட்டுக்கு 2 கிலோ தவிடும், அரைக்கட்டு வைக்கோலும் கொடுப்போம். அதிக நோய் எதிர்ப்பு சக்தி, சோர்வு இல்லாத உழைப்பும்தான் இந்த மாடுகளோட சிறப்பு. டெல்டா பகுதியோட சேறு பத்தி சொல்லவே வேணாம். அப்படிப்பட்ட சேத்தில் தொடர்ந்து 8 மணிநேரம் ஏர் பூட்டி உழுதாலும்.. சோர்வில்லாமல் இருக்கும். இதோட கால் குளம்பு, குதிரையோட குளம்பு போலவே இருக்கும். கால தரையில் வைத்து இழுக்காமல் தூக்கி வைத்து நடக்கும். கிடேரிக் கன்னுகளை 3 வயதில் பருவத்திற்கு வரும். சினை பிடித்ததிலிருந்து 281 – ம் நாள் கன்னு ஈனும். ஒரு பசு... சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனும். தினமும் இரண்டரை லிட்டர் பால் கொடுக்கும். இதில் சத்து அதிகம். 9 லிருந்து 12 மாதம் வரைக்கும் கறவை இருக்கும்.

கோடையில் பராமரிக்கும் கோனார்கள்!
இந்தப் பகுதியில் கிடை சேர்க்கும் கோனார்கள் இருக்காங்க. கோடைக் காலத்தில் பசுந்தீவனம், தண்ணீருக்கு தட்டுப்படாக இருக்கும். அந்த நேரத்தில் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விவசாயிங்க  கஷ்டப்படுவாங்க. அவங்களுக்கு உதவுறதுதான் கோனார்களோட வேலை. தை, மாசியில் நெல் அறுவடை முடிந்ததும், மாடுகளை கோனார்கிட்ட ஒப்படைச்சுட்டால், அவங்க மேய்ச்சி, முறையாக பராமரித்து, கிடைக்கு பயன்படுத்திட்டு.. வைகாசி மாதம் திரும்ப உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவாங்க. இதற்கு ஒரு மாட்டுக்கு கூலியாக 100 ரூபாய் கொடுத்தால் போதும்.எல்லா மாடுகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு கிடையா மேய்ப்பாங்க. ஒரு கிடையில் சுமாராக 500 பசு  மாடுங்களும்.. 2 பொலிக்காளைங்களும் இருக்கும். மேய்ச்சலுக்குப் போகும் போது கிடையில் இரக்கும் காளைகளோட, இணைந்து, பசு மாடுகள் சினை ஆயிடும். பொதுவாக இந்தப் பகுதியில் சாகுபடிக்கு முன்ன கோனார்க்கிட்ட சொல்லி நிலத்தில் கிடை போடுவாங்க. உள்நாட்டில் இருக்கும் நாட்டு இன மாடுகளிலேயே, இந்த உம்பளாச்சேரி மாடுகளோட கழிவில் நல்லது செய்யும் பாக்டீரியா அதிகமாக இருக்குனு சொல்றாங்க. அதனால், மண்ணுக்கு நிறைய சத்து கிடைக்கிறது. ஒரு ஏக்கர் நில்திற்கு, ஒரு நாளைக்கு கிடை போட, 1,600 ரூபாய் கொடுக்கணும். இதன் மூலமாக கோனார்களுக்கும் வருமானம் வந்துவிடும்.

100% மானியத்தில் மாடுகள்!
இந்த இன மாடுகளோட, வேற இனங்களை கலந்துடாக்கூடாது என்பதில் எங்க சங்கம் மிகவும் கவனமாக இருக்கு. இந்த பகுதிகளில் இருக்கும் உம்பளாச்சேரி மாடுகளுக்கு இதே இன மாடுகளோட உறைவிந்தைத்தான் செலுத்தணும் என்று கலெக்டர், முதலமைச்சர்கிட்ட கோரிக்கை வைத்து, வெற்றி அடைந்திருக்கோம்.எங்க சங்கத்தோட முயற்சியால், விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உம்பளாச்சேரி மாடுகளை வாங்கி கொடுத்து இருக்கோம். உம்பளாச்சேரியில் மட்டுமே சுமார் 2 ஆயிரம் மாடுகளும், கொருக்கையில் ஆயிரம் மாடுகளுக்கு மேலையும் இருக்கு. இன்னும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பல ஆயிரம் மாடுகள் இருக்கு. இதை பல லட்சமாக பெருக்கணும் என்பதுதான் எங்க லட்சியம். அதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக செய்துகிட்டு இருக்கோம் என்றார் ஜானகிராமன்.
தொடர்புக்கு
ஜானகிராமன், செல்போன் : 93454 - 48550

Wednesday 30 October 2013

நாட்டு பசு விற்கும்போது

நாட்டு பசு விற்கும்போது:



நாட்டுபசுக்களை வணிக பொருளாக கருதாமல் உங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராக பாருங்கள். உங்களிடம் அதிகமாக பசுக்கள் இருந்தாலும் உங்கள் வீட்டுக்கென்று ஒன்றிரண்டு பசுவை வைத்துக்கொள்ளுங்கள். காலம் காலமாக தலைமுறைகளாக வைத்து பராமரிக்க.. உங்கள் குடும்பத்தின் அங்கமாக.. மிக மோசமான சூழல் தவிர வேறு எந்த சூழலிலும் அதை மட்டும் விற்க வேண்டாம். அப்படி ஒரே ஊரில் பல தலைமுறைகளாக வளரும் பசுக்களுக்கு விலை மதிப்பே கிடையாது! உங்கள் குடும்பத்திற்கே ஆன பசுவாக மாறிவிடும். அப்படி நம் முன்னோர்கள் பசுக்களை வைத்திருந்ததால் தான் திருமண சீதனத்தில் பிறந்த வீட்டு பசுவும் இடம் பெற்றிருந்தது

 (உதாரண-ஆதாரம்: கொங்கு நாட்டின் மங்கள வாழ்த்து).

வரிகள்: கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!

குழந்தை பிறந்து செல்லும் போதும் ஆச்சி மாடு (குழந்தை பாலுக்கான பசு)கொடுக்கும் சடங்கும் இருந்தது.

நீங்கள் நாட்டு பசுக்களை வாங்கும் போதும் விற்கும் போதும், "பசுவை துன்புறுத்தாமல் வைத்து பராமரிப்பேன். எக்காலத்திலும் அடிமாட்டுக்கு விற்க மாட்டேன். மறுபடி விற்கவேண்டிய சூழல் ஏற்ப்பட்டாலும் இதுபோல உறுதி வார்த்தை தருபவருக்கு மட்டுமே பசுவை கொடுப்பேன்" என்று வாக்குறுதி பெறுங்கள்/கொடுங்கள். இது திடீர் என்று சொல்லப்படுவதல்ல. காலம் காலமாக நம் முன்னோர் பின்பற்றியது. இது வெறும் சடங்காக கருதி பொய் சத்தியம் செய்பவனுக்கு கொடுக்காமல் உண்மையிலேயே இவன் பசுவை கொலைக்கு அனுப்ப மாட்டான் என்று நம்பும் நபர்களுக்கு மட்டுமே பசுவை விற்கவும்.

Tuesday 22 October 2013

பசுக்கொலையை நியாயப்படுத்தலாமா..??



மான்களும், புலிகளும் கூடத்தான் ஒருகாலத்தில் வேட்டையாடப்பட்டு வந்தது. அதை மன்னர்களும் செய்தார்கள். வெள்ளையர்களும் ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினர். பல இனக்குளுக்களுக்கு அது குலத்தொழில்-முன்னோர்கள் கலாசாரம் கூட!. ஏன் வேடர் என்ற சாதியே அரசு பட்டியலில் உண்டு. அதற்காக மான்களை/புலிகளை கொல்ல கோருவது இன்றைய சூழலுக்கு ஒப்புமா..??

மான்கள்/புலிகளை போலவே நாட்டு பசுக்களின் எண்ணிக்கையும் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கிறது. பல நாட்டு பசு இனங்கள் மிக மிக அருகி விட்டன. தமிழகத்தில் மட்டுமே முற்காலத்தில் 122 க்கும் மேற்ப்பட்ட நாட்டு பசு இனங்கள் இருந்துள்ளன. தற்போது அது விரல்விட்டு எண்ணிவிடும் அளவு குறுகி விட்டது. புலிகளின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு அதன் வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது. மான்கள்/புலிகளுக்கு ஒரு நியாயம், பசுக்களுக்கு ஒரு நியாயமா..?

நம் பாரதத்தில் பசுக்களை வெறிபிடித்தது போல வெட்டி உண்ணும பழக்கம் இல்லை. இறந்த பசுக்களை மட்டுமே உண்டு வந்தனர்; அதுவும் சில இனக்குழுக்கள் மட்டுமே. விலை குறைவு என்று பார்த்தால் மார்சுவரியில் இருக்கும் அநாதை பிணங்கள் பசு மாமிசத்தை விட சீப், நாய்க்கறியும் சீப்பாக கிடைக்கும். ஏன் சும்மாவே கிடைக்கும். சீப் என்று பார்த்தால் தற்போது இயற்கை வேளாண் பொருட்கள் மரபணு மாற்றப்பட்ட-செயற்கை உரங்கள் கொண்டு விளைவித்த உணவை விட விலை கூடவே இருக்கின்றன-அப்போது மட்டும் பணத்தை பார்க்காமல் இயற்கை உணவை பரிந்துரைப்பது ஏனோ..??

பசு மாமிசம் என்பது வெளிநாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக கையாளப்படும் தந்திரம். இங்கு மற்ற விலங்குகள், ஆன்மிகம் இத்யாதிகளை கொண்டு குழப்பாமல் இயற்கைக்கு, தற்கால சூழலுக்கு நன்மை எது என்று ஆலோசிப்பது சரியான பாதையாக இருக்கும்.

சீமை மாடுகளை வெறி அடங்கும் வரை அதன் மேல் பாய்ந்து பச்சையாக அதன் கறியை கடித்து குதறினாலும் இந்த மாமிச வெறியர்களை யாரும் கேள்வி கேட்க போவதில்லை. அக்கரை நாட்டு பசுக்களின் மீதுதான். நாட்டு பசுக்கள் இருந்தால் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்துகள், மருத்துவம் என பல லட்சம் கோடி வணிகத்துக்கு வேலை இன்றி போகும்!

இவற்றை விட்டுவிட்டு பல்வேறு முகமூடிகளில் திரியும் கம்யுனிஸ்ட்கள் கற்று தந்த குதர்க்கமான கேள்விகளை கேட்டு தன்னை அறிவாளி என்று நிறுவி கொள்ள முனைவதால் எந்த பயனும் யாருக்கும் இருக்கபோவதில்லை.இதை உணர்ந்து நாட்டு பசுக்களை காக்கவும், மீட்கவும் இயற்கை/வேளாண் ஆர்வலர்கள் முன்வர வேண்டும்..!

மேலும்,

எந்த ஒரு மாமிசம் சாப்பிடுவதும் பாவச்செயல் தான் மனித இனம் எந்த ஒரு விலங்கையும் சாப்பிட கூடாது என்பது இயற்க்கை நியதியும் கூட .. எப்படி என்றால். மற்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் விலங்குகள் அனைத்தும் (உதாரணமாக சிங்கம், புலி,நரி,சிறுத்தை,நம் வீட்டில் வளர்க்க படும் நாய்) வரை தண்ணிரை நாக்கினால் நக்கித்தான் குடிக்கும். ..

இதுவே சைவ உணவை மட்டும் உண்ணும் விலங்குகளான பசு,ஆடு,யானை,மான் மனிதன் வரை தண்ணீரை வாயினால் உறிஞ்சு மட்டுமே குடிக்கின்றோம். இதில் இருந்தே தெரிய வேண்டும் நம் உணவு சைவம் என்பதே.. நாம் மனிதர்கள் தானே...

அசைவ உணவு என்பதே மனித வாழ்க்கைக்கு புறம்பானது தான். எனவே அணைத்து அசைவ உணவுகளும் தவறானது தான். இதை தடுப்பதற்கு தான் முதல் முயற்சியாக நாம் நம் நாட்டு விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள நாட்டு பசுக்களை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று போராடி வருவது... ஏன் என்றால் நாட்டு பசுக்களை காப்பாற்றினால் தான் அவைகள் தரும் பொருட்களை வைத்து நமது நாட்டின் இயற்க்கை விவசாயத்தை மீட்டெடுக்க முடியும்..

மேலும் இறைச்சிக்காக ஆடுகளை போலவும், கோழிகளை போலவும் பசுக்களை பண்ணை வைத்து வளர்ப்பது இல்லை. மேலும் பசும் பாலில் உள்ள மகத்துவம் தெரியாதவர்கள் தான் எருமை மாட்டின் பாலையும் பசும் பாலையும் சமமாக பார்ப்பார்கள். இவர்கள் பாலையும் கள்ளையும் கூட ஒன்று தான் என்று சொல்ல்வார்கள் போல..

எருமை மாட்டின் பாலை தொடர்ந்து குடித்தால் என்ன என்ன தீமைகள் வரும் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது .அதேபோல் பசுவை பாலுக்காக மட்டுமே வளர்ப்பது அதன் பால் வற்றிய உடன் அடிமாட்டிர்க்கு அனுப்பவது என்பதெல்லாம் பசு என்று நினைத்து நம் நாட்டிற்கு கொண்டு வந்த சீமை பன்னிகள் வந்த பின்பு தான்.. 

ஏன் என்றால் அவற்றின் சாணம் மற்றும் மூத்திரத்தை கண்ணால் கண்டால் கூட நோய் கிருமிகள் தொற்றி விடும் அந்த அளவிற்கு அவை உடல் முழுவதும் விஷம் தான்.. எருமை சாணமும் பசுவின் சாணத்தின் மகத்துவத்தில் பாதிகூட கிடையாது. எருமை சாணத்தில் விபுதி செய்து உபயோகம் செய்து பாருங்கள் இந்த உண்மை தெரியும்..

மேலும் பசுக்கள் வளர்ப்பதே பாலுக்காகதான் என்று நம்மை நம்பவைத்தது தான் நம் நாட்டு பசுக்கள் அழிய முக்கிய காரணம்.. எனவே நம் நாட்டு விவசாயத்தின் முதுகெலும்பான நாட்டு பசுக்களை அழிய விடாமல் அவற்றில் கிடைக்கும் பொருட்ட்களை வைத்து இயற்க்கை விவசாயம் செய்து வந்தேறி அசைவ உணவு பழக்கங்களை படி படியாக வெளியில் அனுப்புவதே சரியாக படும்.. மேலும் நமது விவசாயமும் நம் நாட்டு பசுக்களும் வேறு வேறு இல்லை என்பது தான் உண்மை.. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ளும் வரை பசுக்கொலையை நாம் ஆதரிப்பது தவறு தான்.

Monday 21 October 2013

குஜராத் பக்ரீத் குர்பானி

“இது காஷ்மீர் அல்ல; நீங்கள் பிடித்து வைத்திருக்கும் காவலர்களை கொல்வீர்கள் என்றால் கொன்றுபோடுங்கள்; அதற்குப்பிறகு என்ன செய்யவேண்டுமோ அதை எங்களுக்குச் செய்யத்தெரியும்; ஆனால் நாங்கள் கைது செய்திருக்கும் பசுவதையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய மாட்டோம்.” - சந்தீப் சிங் DSP, வதோதரா, குஜராத்.

குஜராத் மாநில வதோதராவில் சன்ஸ்ரோட் எனும் கிராமத்தில் பெரும்பான்மையினரான முஸ்லிம்கள் பக்ரித் விருந்துக்கு பசுக்களை கொன்றுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சோதனையிட்டு நான்கு கொலையாளிகளைக் கைது செய்தபோது, மசூதியிலிருந்து எச்சரிக்கை ஒலியெழுப்பி 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் வந்து காவல்துறையினரைத் தாக்கியுள்ளனர். 3 காவலர்களைக் கடத்திச் சென்று அவர்கள் மிரட்டியபோதுதான் வதோதரா டி.எஸ்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பின்னர் குஜராத் போலீஸிடம் தங்கள் பச்சா பலிக்காது என்று தெரிந்தவுடன் 3 காவலர்களையும் விடுவித்துள்ளனர் முஸ்லிம்கள். குஜராத் காவல்துறைக்கு நம் பாராட்டுகள்.

ஆனால் அதற்கு ஒருதினம் முன்பு சென்னை அருகே செங்குன்றம் காவல் எல்லையில் ஹிந்து முன்னணியினர் 4 பேர், பக்ரித் பலிக்கு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 42 பசுக்களைக் காப்பாற்றி செங்குன்றம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தபோது, அவர்களை காவல்நிலையத்திற்குள் அடைத்து வைத்து அவர்களுடைய கைப்பேசிகளையும் பிடுங்கி வைத்துக்கொண்டு, 42 பசுக்கள் கொண்ட லாரியை மீண்டும் செக் பொஸ்டுக்கு அனுப்பி அங்கிருந்து முஸ்லிம்கள் அவற்றை மீட்டுச் செல்லும்படியாக, முஸ்லிம்களுக்கு அனுகூலமாக நடந்துகொண்டுள்ளது தமிழக்க் காவல்துறை.


Thursday 3 October 2013

தினமும்..

வீட்டிலோ அருகிலோ பசு இருந்தால், உங்கள் உணவின் முதல் பிடி சாதத்தை பசுவுக்கு எடுத்து வைத்து கொடுங்கள். எல்லா தெய்வங்களும் திருப்தி அடையும். உங்கள் நாள் லட்சுமி கடாட்சத்தொடு துவங்கும். பல பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். இது நம் முன்னோர் பின்பற்றிய வழக்கம் கூட (இடையில் மறக்கடிக்கப்பட்டது!)