Wednesday 3 September 2014

'பசுவுக்காகவே எனினும்' தண்ணீர் கேட்டு இரப்பதாக இருந்தால் அது அந்த நாக்குக்கு கேவலமே என்று பொருள் கூறுகிறார்கள். மாறாக, பசுவுக்கு நீர் வேண்டும் என்று 'இரந்தாலுமே' அது அந்த நாவிற்கு இழிவை தராது என்று பொருள்படுவதாக தமிழறிஞர் ஒருவர் சொன்னார். எனக்கும் இரண்டாவது பொருளே சரியெனப்படுகிறது.

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்
(அதிகாரம்:இரவச்சம்; குறள்:1066)

எது எப்படியானாலும் பசுவைப் பேணுவதை மிகப்பெரும் தர்மம் என்ற அடிப்படையில் தான் வள்ளுவரும் சொல்லியுள்ளார். பசுவை தொழும் இடம் என்னும் பொருளில் வந்ததுதான் தொழுவம் என்னும் பேர். கோயில் என்பது கோ+இல், ஆலயம் என்பது ஆ+லயம் என ஆன்மீகத்தின் அடிப்படைகள் அனைத்தும் பசுவை சுற்றியே உள்ளன. (பசு என்றால் இந்திய நாட்டுப்பசு மட்டுமே; வேறு எதுவும் பசுக்கள் இல்லை. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

படம்: Tamil Wisdom, EJ Robinson, 1873



நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை


August 19, 2014

மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது மத்திய அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதையும், தற்போது பசுக்கொலைகள் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்புக்கள் மத்தியில் வலுத்து வரும் பா.ஜ.க. வெறுப்புணர்வை தணிக்கும் முயற்சியாகவுமே தெரிகிறது. எனவே, உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதை மறு ஆய்வு செய்யவேண்டியுள்ளது.
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107580
(1) முதலில் பசுக்களுக்கு ஒதுக்கியிருக்கும் இந்த வருடத்திற்கான தொகையான ரூ.150 கோடியோ அல்லது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள ரூ.500 கோடியோ மிக மிக சொற்பமானது என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும். இது யானை பசிக்கு கடுகுச்சோறு போன்றதாகும். இந்த தொகைகள், அன்றாடம் ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளும் பசுக்கொலைக்கூடங்களுக்கான முதலீடு, நவீனமயமாக்க செலவிடப்படும் தொகைகளைவிட சொற்பமானதாகும். மேலும், ‘பிங்க் புரட்சி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு போக்குவரத்து, குளிர் மையம், பேக்கிங், விளம்பரம் என பல்வேறு இனங்களில் 70% வரை மானியம், விற்பனை வரிச்சலுகை, வருமான வரிச்சலுகை என்று கணக்கிட்டு பார்த்தால் எங்கோ போய் நிற்கும். அதனோடு இந்த நிதி ஒதுக்கீட்டை ஒப்பிட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இந்த பிங்க் புரட்சி மூலம் வருஷம் சுமார் 26,000 கோடி வருமானம் கிடைக்கிறதாம். ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை. எருமை மாமிசம் என்ற பேரில் பசு மாமிசம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அதிகாரிகளே தெரிவிக்கிறார்கள். இவ்வளவு ஏற்றுமதியும் வெறும் ஆண் எருமை மற்றும் உதவா மாடுகள் மூலம் மட்டுமே நடக்கிறது என்பதை குழந்தை கூட நம்பாது என்பதும் அறிந்த விஷயமே. அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் தெருவில் சுற்றும் மாடுகளை பிடிக்கவரும் அரசு ஊழியர்களை தாக்குவோரை தடுக்க கேமரா பொருத்திய வண்டிகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கடத்தப்படும் பசுக்களை தடுக்க சுங்கச்சாவடிகளில் முறையான கண்காணிப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் அதவும் கூட இயலாத சூழலே தற்போது உள்ளது. பசுபாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே பசுவதை பெருமளவு குறைந்துவிடும்.
970151_165348566993516_924177262_n
(2) இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக உள்ளன. அதைபற்றிய விளக்கங்களை அரசுத்துறைகள் விவரிக்க வேண்டும். உதாரணமாக “improve the genetic makeup” “upgrade nondescript cattle using elite indigenous breeds” “distribution of disease free high genetic merit bulls” “AI centre “ (Artificial Insemination) போன்றவை. இதே அறிக்கையில் கடைசியில் சொல்லப்பட்டபடி 80% நாட்டுப்பசுவினங்கள் இன்னும் அடையாளம் காணப்படாத-அங்கீகரிக்கப்படாத இனங்களாகவே உள்ளன. அப்படியிருக்க மேற்சொன்ன வாக்கியங்களை படித்தால் இந்த அங்கீகரிக்கப்படாத இனங்கள் உயர்ந்த ரகங்கள் என்று சொல்லப்படும் பசு ரகங்களால் கலப்படம் செய்து அழிக்கபடுமோ என்ற கேள்வி எழுகிறது. மேலும், செயற்கை கருவூட்டல் என்பது இயற்கைக்கு விரோதமானதும் நீண்டகால நோக்கில் கெடுதலையுமே விளைவிக்கும். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 70 HF ரக காளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Untitled
வெள்ளையர்கள் நம் நாட்டு பசுவினங்களை ஆய்வு செய்த பொது பெரும்பாலான பசுவினங்களை ஒரே இனத்தின் கிளைகள் என்று கூறிவிட்டார்கள். அதன்பின் நாமும் அதை பற்றி பெரிய அளவில் கவலைப்படாமல் அதை பெரிய மாற்றமின்றி இன்றளவும் பின்பற்றுகிறோம். இன்னும் வரையறை செய்யப்படாத எண்ணற்ற பசு ரகங்கள், அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த திட்ட அறிவிப்பில் அதற்கான அறிவிப்புகள் இல்லாததோடு, அவ்வாறான வரையறைப்படுத்தாத பசுவினங்கள் கிர், சாஹிவால் போன்ற பசுக்களைக்கொண்டு மேம்படுத்தப்படும் என்று கூறியிருப்பது அவ்வினங்களின் தனித்துவம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
asdf
 (3) மூன்றாவதாக, இந்த அறிக்கையில் கோகுல் கிராம் மற்றும் கோசாலைகள் போன்ற அமைப்ப்புக்கள் குறைந்தது ஆயிரம் பசுக்களோடு செயல்படும் என்று அறிவித்திருப்பது தற்போதைக்கு சரியென பட்டாலும் நீண்ட கால நோக்கில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டியதே. அறிக்கையின் சாராம்சம், பசுக்களை ஒரு வணிகப்பொருளாகவும், பால் மெஷினாகவும் பார்க்கும் மனோபாவத்தை வளர்ப்பதாகவும் உள்ளது. நமது நோக்கம் விவசாயி வீட்டுப்பசு முறை. இதுதான் நமது நாட்டின் பூர்வீக கலாசாரம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பரம்பரை பசுக்கள் இருக்கும். சாதாரண விவசாயி முதல் அரசர்கள் வரை இவை உண்டு. கல்யாணம் செய்யும்போது சீதனமாக வரும் பெண் வீட்டு பசு வர்க்கம் ஆண் வீட்டு பசு வர்க்கத்தோடு கலக்கும். இதனால் அந்த குடும்ப வாரிசுகளைப்போலவே அந்த குடும்பப்பசுவும் அதன் வர்க்கத்தை பெருக்கும். இது ஒரு அற்புதமான அமைப்பு. இப்படி குடும்பப்பசு முறை இருந்ததால்தான் பஞ்ச காலத்தில் கூட விவசாயிகள் மாடுகளை விற்காமல்-கொல்லாமல் இருந்தனர் என்று வெள்ளையர்கள் வியந்து எழுதினர். ஒரு பெண் புதிதாக கல்யாணமாகி வரும்போதும், ஒரு வீட்டுக்கு குடிபோகும்போதும் பால் காய்ச்சுவதே முதல் பணியாகும். அரசர்கள் பட்டாபிஷேகத்தின் போது அவர்கள் வர்க்க பசுவுக்கு மரியாதை செலுத்தி வணங்கப்படும். அது இன்றளவும் தொடர்கிறது.
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
மேலும் நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும் மறைமுகமாக இயற்கை வேளாண்மைக்கு உதவுவதன் மூலம் நோய்கள் தவிர்ப்பு, மருத்துவ செலவினங்கள் தவிர்ப்பு, தேவையற்ற உர இறக்குமதிகள் தவிர்ப்பு, மனிதவளம் சேமிப்பு, சீமை மாடுகளுக்கு செலவாகும் மும்மடங்கு தீவன-நீர் சேமிப்பு, நோய் தாக்கு குறைவு என்று கணக்கிலடங்கா பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நாட்டுப்பசுக்களை வாழ்வின், இயற்கையின் அங்கமாக பார்க்கும் பார்வை அரசுத்துறையினருக்கு வர வேண்டும்.
1146521_10202688760132746_1246986842_n
பாராட்டும் விதமாக முதலில், நாட்டுப்பசுக்களை பற்றிய சிந்தனை வந்திருப்பதே பாராட்டக்கூடிய ஒன்றுதான். இரண்டவாது A2 பால் பற்றி அரசு தரப்பில் வந்துள்ள செய்தி என்பதும், பசுவின் மூலம் பெறக்கூடிய மருத்துவ பொருட்கள் போன்றவற்றை அங்கீகரித்திருப்பதும் பாராட்டலாம். விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விருதுகள், சங்கங்கள் போன்றவையும் வரவேற்க வேண்டிய ஒன்று.
மோடி ஆதரவாளர்கள், ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி இயக்கங்கள் தங்கள் தலைமைக்கு அழுத்தம் தர வேண்டும். சாதுக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி, திக்விஜய்சிங் போன்ற எதிர்கட்சியினர் கூட பசுவதைத் தடையை ஆதரித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது.
நாட்டுப்பசுக்கள் அழிவிலிருந்து நிரந்தரமாக காப்பாற்ற என்னெல்லாம் செய்யலாம்? உதாரணமாக பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானையே எடுத்துக்கொள்வோம். ராஜஸ்தானில், மாநில அரசு ஒட்டகங்களை காக்க அவற்றை மாநில விலங்காக அறிவித்து, அதன் கொலையை முழுமையாக தடை செய்துள்ளது. (ஆயினும் பாரம்பரிய ஒட்டக ரேஸ் தடை செய்யப்படவில்லை என்பதை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்கவும்!). இதே ராஜஸ்தானில் பசுவதை தடைக்கு என தனி அமைச்சகமே உள்ளது. அதேபோல யானைய காக்க மத்திய அரசு யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளது. இஸ்கான் பசுக்களுக்கென தனி பல்கலைக்கழகம் துவங்கப்போவதாக அறிவித்து வேலைகளை துவங்கியுள்ளார்கள். இதை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளில் பஞ்சகவ்ய மருத்துவம் மற்றும் மருந்துகள் பற்றிய பாடங்கள் வைக்கபப்ட வேண்டும். அதுபோல நாட்டுப்பசுவை தேசிய விலங்காக அறிவித்து, நாட்டுப் பசுக்கொலையை முழுவதும் தடை செய்து, நாட்டுப்பசுக்களுக்கென தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், நாட்டுப்பசு மைய பொருளாதார ஊக்குவிப்பு போன்றவற்றை அரசு கையிலெடுக்க வேண்டும்.
524963_351270591630053_449786875_n
நாட்டுப்பசுக்கள் வளர்ப்போர் ஸ்திரமான பொருளாதார தற்சார்பு நிலை எட்ட அடித்தளங்கள் உருவாக்காமல், வெறுமனே பசுவதை தடைச்சட்டம் என்று கொண்டுவந்தால் அது கடைசியில் விவசாயிகளுக்கு கேடாகத்தான் முடியும். அதாவது வெளிநாடுகளைப்போல நாட்டுப்பசுவின் A2 பாலுக்கு அதிக விலை, நாட்டுப்பசுவிலிருந்து பாலல்லாத பிற பொருட்கள் தயாரிப்பு, விவசாயத்தில் உரத்தேவையில் நாட்டுப்பசுக்களின் பங்கு, சந்தை விரிவாக்கம்-உருவாக்கம் போன்றவை, அவை குறித்த விழிபுணர்வு போன்றவற்றை செய்யாவிட்டால் பசுக்களே விவசாயிகளுக்கு பாரமாக போய்விடும். மேற்கூறிய முயற்சிகளை தற்போது அரசு சார்பற்ற தன்னார்வலர்களும் தொண்டு அமைப்புக்களும் செய்து வருகின்றன. ஆனால் தற்போதைய அறிவிப்பு அவ்விதமான அடித்தளங்கள் உருவாக்க உதவுமா என்று சந்தேகம் ஏற்படுத்துகிறது.

http://www.tamilhindu.com/2014/08/நாட்டுப்-பசுக்களுக்காக-ம/

உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்

June 20, 2014

 
Modi-Quote_pink_revolutionசென்ற காங்கிரஸ் ஆட்சியில் பீப் லெதர் தொழிலுக்கு சாதகமாக மாட்டிறைச்சி மையங்கள், பசுவதைக்கூடங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு எழுதப்படாத சட்டங்களாக இந்த தொழில் ஊக்குவிக்கப்பட்டது. சட்டவிரோத பசுக்கடத்தலுக்கு ரயில்களை பயன்படுத்தும் அளவு பகிரங்கமாக நடந்தது. சில ஆண்டுகளிலேயே உலகின் நம்பர் ஒன் பீப் ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு இந்தியா வந்தது. இந்த சாதனைகள்  பாலுக்கு உபயோகமற்ற வயதான மாடுகளையும் எருமைகளையும் மட்டுமே கொன்று செய்யப்பட்டது என்று பொதுமக்களை நம்ப சொன்னார்கள். இதனை பிங்க் புரட்சி என்று நாளேடுகளும், சமூக ஆர்வலர்களும் குறிப்பிட்டு எதிர்த்து வந்தார்கள். அரசியல் கட்சிகளில் பிஜேபி மற்றும் பல ஹிந்து அமைப்புக்களும், இயற்கை நலன் சார்ந்த அமைப்புக்களும் எதிர்த்து குரல் கொடுத்தனர். பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியும் தனது பிரசாரங்களின்போது பிங்க் புரட்சி பற்றி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் தேசத்தின் சொத்தான பசுக்களை அழிவிலிருந்து காப்பது குறித்து அறிவித்திருந்தனர்.
திருசெங்கோட்டு பகுதியில் மோர்ப்பாளையம் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு கறிக்கு வெட்ட பசுக்கள் இங்கிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஊரறிந்த ரகசியம். மத்திய, மாநில அரசுகளால் இந்த சட்டவிரோத கடத்தலைத் தடுக்க இயலவில்லை. வாரம் மூன்று நான்கு லாரிகள் பசுக்களை அடைத்து ஏற்றிச்செல்லும். வளர்க்க விரும்புவோர் வாங்கச்சென்றால் அவர்களுக்கும் நாட்டுப்பசுக்கள் கிடைக்கும். ஆனால் தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன; வெளிநாட்டு அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு-ரேக்ளா  தடைசெய்யப்பட்டு காளைகள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. இவை உணர்த்துவது நாட்டுப்பசுக்களின் மீது வெளிநாட்டு சக்திகள் தொடுத்திருக்கும் திரைமறைவு இன அழிப்புப் போரேயாகும்.
illegal_cow_traffickingபசுக்களைக் கடத்தும் லாரிகளைக் காட்டிக்காட்டி ஓட்டுக்கேட்டவர்கள் இன்று பொதுமக்களை எதிர்கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். கிராமப்பகுதிகளில் இந்த சங்கடம் மிக கடுமையாக உள்ளது என்பதே நிதர்சனம். பதவியேற்று ஒரு மாதம் கடந்தும் இதுவரை ஒரு வார்த்தை கூட பிரதமர் பசுக்கள் குறித்து பேசாமையும், பீப் மற்றும் லெதர் நிறுவனங்களுக்கு கிடைத்த சலுகைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதும் ஜீரணிக்க இயலாத உண்மைகளே. கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நவீன பசுக்கொலைக்கூடங்கள்; இருக்கும் பசுக்கொலைக்கூடங்களை நவீனமாக்குவது போன்ற சதிகளுக்கு எதிராக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. கறுப்பு பணத்தை மீட்க பதவியேற்ற முதல் நாள் கமிஷன் அமைத்த பிரதமரை பாராட்டலாம். கருப்புப்பணம் உருகிவிடப்போவதில்லை. ஆனால் தினம் தினம் மடியும் பசுக்களுக்கு உயிர்கொடுக்க யாரேனும் உள்ளார்களா? இவ்வளவுநாள், இந்த கொடுமைகளுக்கு காரணமென்று காங்கிரசை கைகாட்ட முடிந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு யார் பொறுப்பு? யார் பதில் சொல்வது? அந்த பாவமும் பசுக்களின் ரத்தமும் யாரை கறைபடுத்தும்?
இஸ்லாமிய படையெடுப்புக்களுக்கு முன்னரே ஒரு நாட்டையும் அம்மக்களின் உணர்வுகளையும் தொட்டு பார்க்க முதலில் அந்நாட்டின் பசுக்களை கவர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பசுக்களை மீட்டவர்கள், அப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் தெய்வங்கலாக் போற்றப்பட்டனர். முஸ்லிம் படையெடுப்புக்களை அரசர்கள் தங்கள் நாடுகளை காக்க எதிர்த்தாலும் பொதுமக்களின் கோபம் இஸ்லாமிய படைகள் பசுக்களையும், கோயில்களையும் சீரழிக்க துவங்கிய போதே வெடித்துக்கிளம்பியது. அதனாலயே, பாபர் தனது வாரிசுகளுக்கு இந்தியாவில் நிரந்தர பசுவதை தடை செய்யப்படுவத்தின் அவசியத்தை உணர்த்தியிருந்தார். கிறிஸ்தவ வெள்ளையரின் காலனியாதிக்கத்திற்கு எதிரான முதல் போர் மாட்டுக்கொழுப்பை பயன்படுத்த சொன்னதன் மூலமே ஏற்பட்டது. அதை தொடர்ந்து 1917 பீகார் கலவரம், சாதுக்கள் நடத்திய டெல்லி போராட்டம், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று இன்றுவரை இந்த தேசம் பசுக்களின் பொருட்டு லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவை உணர்த்துவது அன்று முதல் இன்று வரை பசுக்கள் இந்திய மக்களின் உணர்வின் மையம் என்பதும் பசுவதை என்பது சகிப்புத்தன்மையின் எல்லை என்பதுமே.
ban_cow_slaughter_1வெறும் உணர்வுரீதியான எதிர்ப்பு என்பதை தாண்டி, பசுக்களின் ஆரோக்கியம்-சமூக-பொருளாதார ஆளுமை என்பதையும் கணக்கில் கொல்ல வேண்டும். நாட்டுப்பசுக்கள் மூலம் பல ஆயிரம் கோடி உரம், மருந்து மற்றும் பெட்ரோலிய இறக்குமதிகளை குறைக்க இயலும். நாட்டுப்பசுக்களின் மூலம் பெறப்படும் மருந்துப்பொருட்களுக்கு மிகப்பெரிய வணிகச்சந்தை உள்ளது. ஆரோக்கியம், விவசாயம், இயற்கை என்று எல்லா வகையிலும் நாட்டுப்பசுக்களின் வீச்சு அளப்பரியது. இயற்கை வேளாண்மை நாட்டுப்பசுகள் இன்றி சாத்தியமில்லை. இன்றைய நிலையில் பாரதமாதாவை விட கோமாதா முக்கியம். கோமாதாவினால் தான் பாரதமாதா வளமும் புனிதமும் பெறுகிறார். கோமாதாவை நம்பித்தான் பாரதமாதா.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாட்டுப்பசுக்களை (Bos indicus) தேசிய விலங்காக அறிவிக்கவும், பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக நாட்டுப் பசுக்களை மையமாகக் கொண்ட பொருளாதார புரட்சிக்கு வித்திடவும் வேண்டும். நாட்டுப்பசுக்களுக்கு தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் ஆகும்.

Thanks: http://www.tamilhindu.com/2014/06/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/

WHY கோமாத IS OUR குலமாதா?

WHY கோமாத IS OUR குலமாதா????

நாட்டு பசுவின் மகிமை:

ஏதேனும் ஒரு சில காரணங்களால் நம் வீட்டிலோ அல்லது தோட்டத்திலோ வளரும் மரத்தின் கிளைகளை அகற்ற நேர்ந்தால் அதை மீண்டும் துளிர் விட செய்ய நாட்டு பசு சாணம் கொண்டு பூசி வைக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அந்த மரங்களை கிருமிகள் தொற்றிலிருந்து காப்பாற்றிவிடலாம்..


WHY கோமாதா IS குலமாதா?

சொட்டு நீர்க்குழாய் அடைப்புக்குத் தீர்வு!

சொட்டு நீர்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் அத்தனை விவசாயிகளுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்னை சொட்டு நீர்க் குழாய்களில் உப்பு அடைப்பு. இதை சரி செய்வதற்கு சொட்டு நீர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் 'சல்பியூரிக் ஆசிட்’டைதான் பயன்படுத்தச் சொல்கின்றனர். அந்த ஆசிட் பயிர்களில் படும்போது, பயிர் கருகி போய்விடுகிறது. 

இந்தப் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ...

ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கும் சொட்டு நீர்க் குழாய்களுக்கு 20 லிட்டர் தண்ணீரில், 10 லிட்டர் நாட்டு பசு சிறுநீரைக் கலந்துகொள்ள வேண்டும். பாசனம் செய்து முடிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, உரம் செலுத்தும் குழாய் வழியாக இந்தக் கரைசலைச் செலுத்தி, ஐந்து நிமிடம் மட்டும் ஓடவிட்டு மோட்டரை நிறுத்திவிட வேண்டும். மீண்டும் 24 மணி நேர இடைவெளி கொடுத்து, எல்லா கேட் வால்வுகளையும் திறந்துவிட்டு பாசனம் செய்தால், சொட்டு நீர்க் குழாயில் இருக்கும் அடைப்புகள் முழுக்க வெளியேறிவிடும்.

முகமது பயிஸ் கான்

பசுவதை தடை சட்டம் கேட்டு உண்ணாவிரதம் இருந்த முகமது பயிஸ் கான்

பசுவை தேசிய விலங்காக்கச் சொல்லி ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கச் சொல்லி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோரிக்கை. வாழ்த்துக்கள் ஆர்.எஸ்.எஸ்.

பார்ப்போம் எவ்வளவு நாளில் நிறைவேறுகிறது என்று. சமீபத்தில் யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்தது அரசு. ராஜஸ்தான் அரசு தேசிய விலங்காக ஒட்டகத்தை அறிவித்து அதை கொலை செய்வதை நிரந்தரமாக தடுத்தது. அப்படி பார்க்கையில் தேசிய விலங்காக பசுவை அறிவிப்பதில் சிக்கல் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இனி செய்யலாமா வேண்டாமா என்ற அரசின் எண்ணத்தில் தான் இருக்கிறது.

http://timesofindia.indiatimes.com/india/RSS-offshoot-now-demands-national-animal-status-for-cow/articleshow/40859303.cms


கோ பூஜை மற்றும் குலதெய்வ பூஜை

கொங்கதேசத்தின் காங்கய நாட்டிலுள்ள காடையூர் காணியில் உள்ள கொங்க கோசாலையில்(Konga Goshala),
ஆவணி அமாவாசை (25/08/2014), திங்கள்கிழமை சாய்ந்திரம் 5 மணியிலிருந்து ராத்திரி 8 மணி வரை, கோ பூஜை மற்றும் குலதெய்வ பூஜை நடைபெறும்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் தாமாகவே சுயம் பிரதிஷ்டை ஆகியுள்ள நாட்டு பசு மாட்டினை கோ பூஜை செய்வதன் மூலம் சகல தோஷங்களும் நிவர்த்தியாகி, சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நிதர்சனம்.

முழுக்காது பிறழந்தை கூட்ட குலகுரு ஸ்ரீலஸ்ரீ மீனாக்ஷி சைவபுரந்தர பண்டித குருஸ்வாமிகள் மற்றும் காடையூர் பட்டக்காரர் ஸ்ரீமான் அமராபதி காங்கய மன்றாடியார் தலைமையில் நடைபெறும். கோ பூஜையில் கலந்து கொண்டு குரு அருளும், குலதெய்வ அருளும், சகல தேவதைகளின் அருளும் பெறவும்