Wednesday 3 September 2014

வெளிநாட்டு காளைகள் இறக்குமதி

ஜல்லிக்கட்டு வணிகமயாகிவிட்டது என்றும் அது மீண்டும் கிராம ஆன்மீக விழாவாக கொண்டாடும் சூழல் உருவாக்கவேண்டும் என்று ஜல்லிக்கட்டு தடையை ஆதரித்தவர்கள் எழுதினார்கள். காளைகள் சாமானிய கிராமத்து மக்கள் கைகளில் இருந்து பிடுங்கப்பட்ட பின்பு எப்படி சாத்தியமாக்குவார் என்று கேட்டு கொண்டேன். அதற்கு நேற்று விடை கிடைத்தது.டெய்ரி டெவலப்மன்ட் போர்டு 80 டென்மார்க்கின் HF ரக காளைகளை இறக்குமதி செய்யப்போகிறதாம். தரம் தாழ்ந்த (!!) நம் நாட்டு பசு இனங்களின் மீட்பராக சீமை காளைகள் வருகிறது. இதுக்கு மேதாவிங்க வச்ச பேர் Breed Improvement (Article 48). வந்தனா சிவா மொழியில் இது Genetic Pollution!. வருங்காலத்தில் திமிலில்லா HF காளைகளை வீரர்கள் எப்படி அணுகுவார்கள்?. இந்த சீமைமாட்டு பாலை குடித்து வளரும் பயில்வான்களுக்கு சீமை காளை கன்றுகளை அடக்கினாலே பெரிய விஷயம்தான். ஒருபக்கம் மேற்கத்திய அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு தடை; தொடர்ந்து காளைகள் வெட்டுக்கு கேரளா பயணம்; மறுபக்கம் பிடிவாதமாக காளைகள் வைத்திருப்பவர்களிடம் கிறிஸ்தவ மிஷனரிகள் அழுத்தமான பேரம்; இன்னொருபுறம் சீமை காளைகள் இறக்குமதி. புள்ளிகளை இணைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்க போவதில்லை. ஆடி மாச காத்திலும் ஆங்காங்கே அணையா அகல்விளக்குகள் நம்பிக்கை வெளிச்சம் தருகின்றன.
--சசிகுமார்



நம்ம ஆண்கலை விட வெளிநாட்டுக்காரன் அழகா வாட்ட சாட்டமா இருக்கான் னு, அவன் விந்தணுவ இறக்குமதி பண்ணி, எல்லா பொண்ணுகளுக்கும் கருத்தரிக்க வையுங்கடா முட்டா பசங்களா..

No comments:

Post a Comment