Wednesday 3 September 2014

நல்ல மாற்றம்


நாட்டுப்பசுக்களின் நன்மைகளையும் சீமை மாட்டின் தீமைகளையும் உணர்ந்து, இன்று பலரும் சீமை மாடுகளை விற்று தொலைத்துவிட்டு நாட்டுப்பசுககளை வாங்கி வருவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அப்படி வாங்கப்பட்ட பசு. இடம் சேலம் மாவட்டம் ஆத்தூர்.

நாட்டு பசுக்களை சொந்த தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். சீமை மாட்டு பாலை டவுனில் இருப்போருக்கு போய் சேரட்டும் என்று சொசைடியில் ஊற்றுகிறார்கள். கிராமங்களையும் விவசாயிகளையும் கேவலமாக நினைத்தது, அவர்கள் சீரழிவை பற்றி சிந்திக்காத நகரத்து மக்களை பற்றி ஏன் கவலை படனும். கிமாத்து மக்கள் அவர்கள் சொந்த தேவைக்கு மட்டும் சத்தான நாட்டு மாட்டு பால், பாரம்பரிய உணவு வகைகள், இயற்கை காய்கறிகள் போன்றவற்றை பயன்படுத்தவும். நகரங்களுக்கு அனுப்ப மருந்தை போட்ட, ஓட்டு ரக காய்கறி உணவுகளையும், சீமை மாட்டு பாலையும் அனுப்புங்கள். அவனவன் உருப்படியாக வாழ நினைத்தால் கிராமத்திற்கு வந்து ஒழுக்கமாக சாணி எடுத்து விவசாயம் செய்து வாழட்டும். அப்போது விவசாயமும் வாழும்.

No comments:

Post a Comment