Wednesday 3 September 2014

அக்னிஹோத்ரம்

அக்னிஹோத்ரம் என்பது என்ன ? 
(குறிப்பு: இங்கே பசு என்றால் நாட்டுப்ப்பசு; நெய் என்றால் நாட்டுப்பசுவின் நெய்)

பூமியை சுற்றி சந்திரன், சூரியன் மற்றும் பல கிரகங்கள் ஓடுகின்றன. பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ளும்போது அந்த கிரகங்கள் ஒவ்வொரு இடங்களிலும் நிற்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட நேரங்களில் மனிதன், மிருகம் மற்றும் நமது எண்ணங்கள் என அனைத்தும் ஒரு மாறுதலுக்கு உள்ளாகின்றன. உண்மையைக் கூறினால் அலைகழிக்கப்படும் மனதையும் கூட அந்த குறிப்பிட்ட நேரங்களில் ஸ்திரப்படுத்தினால் நாமும் மனத்தைக் கட்டுப்படுத்தும் திறமையைப் பெற்று விடுவோம். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சுற்றி உள்ள பிரபஞ்சத்தின் வெளியை சுத்தப்படுத்தினால் போதும். அப்படிப்பட்ட நேரத்தில் நம் வீட்டில் உள்ள வெற்று இடத்தையும் நம்மையும் தூய்மைப்படுத்தும் , மன அமைதியைத் தரும் . அதை பெற சில நிமிடங்களே செய்ய வேண்டிய சிறிய வேள்வியே அக்னிஹோத்ரம் என்பது. 



அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுன்கீனப்படுத்தும் நம் வீட்டில் 
வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும்- ரிக், யுஜுர்வன, சாம மற்றும் அதர்வண வேதங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. அக்னிஹோத்ராவை வேத நாராயணனை வேண்டியே செய்தார்கள். ரிஷி முனிவர்கள் துவக்கி வைத்த அதை அப்போது சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த பிராமணர்களே செய்து வந்துள்ளார்கள். வேதத்தில் கூறப்பட்ட முறையிலான அக்னிஹோத்ராவை இன்னமும் கேரளாவில் சில நம்பூத்ரி பிராமணர்கள் கடைப்பிடித்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் காலப்போக்கில் அதே ஹோமத்தை நமக்குத் தேவையான அளவில் மாறுதலாக்கித் தந்து உள்ளார்கள். கடைபிடிக்கப்படும் முறைதான் வேறுபட்டு உள்ளதே தவிர அதன் முடிவில் நமக்கு கிடைக்கும் பலன் இரண்டும் ஒன்றுதான்.
அக்னிஹோத்ரா செய்ய தேவையான பொருட்கள் என்ன? 

ஒரு பிரமிட்
பசு வரட்டி
நல்ல நெய்
முழு அரிசி 
நான்கு வரி மந்திரங்கள். 

இதை எங்கு, யார் செய்யலாம் ? 

இதை வீட்டிற்குள் எந்த அறையிலும் செய்யலாம்
சிறியவர் பெரியவர் என்ற பேதம் இல்லை
ஜாதி மத பேதமும் இல்லை
ஆண்கள் இல்லை பெண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம் 
இதற்கு விரதம் இருந்துவிட்டே செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை
குறிப்பிட்ட நேராத்தில் மட்டும் செய்ய வேண்டும் என்பதே விதி. 

இதை ஆரம்பித்தப் பின் சில நாட்களில் நிறுத்தி
விட்டால் ஏதாவது தீமை வருமா ? 
நிச்சயமாக அப்படி எதுவுமே இல்லை. செய்தவரை அதற்கான நல்ல பலன் கிடைக்கும். விட்டுவிட்டால் எப்போதும் போலத்தான் இருப்பீர்கள். நாம் பல பூஜைகளை ஆரம்பித்துவிட்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் பாதியில் நிறுத்தி விடுவது இல்லையா ? அப்படித்தான் இந்த அக்னிஹோத்ரமும். 

சரி அக்னிஹோத்ராவை எப்படி செய்ய வேண்டும்? 
குறிப்பிட்ட நேரத்தில் காலை சூரிய உதயத்தின்போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் சிறிய பிரமிட் போன்ற தாமிர குண்டத்தில் பசு வரட்டியை வைத்து கற்பூரத்தை முதலில் ஏற்றி அடந்த தீயினால் நெய்விட்ட பசுவரட்டியை பற்ற வைத்து அதை பிரமிட் போன்ற குண்டத்தில் வைத்து எரிய விடவேண்டும். அப்போது அந்த நான்கு வரி மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டே பசு நெய்யினால் ஈரப்படுத்திய சிறிது அரிசியை ஐந்து விரல்களினாலும் எடுத்துக் கொண்டு ஸ்வாகா எனக் கூறிக்கொண்டே அந்த ஹோம குண்டத்தில் போட வேண்டும். அவ்வளவுதான். 
அக்னிஹோத்ர மந்திரம்

காலையில் கூற வேண்டிய 
அக்னிஹோத்ர மந்திரம் 
அக்னயே ஸ்வாகா
அக்னயே இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாகா 
பிரஜாபதயே இதம் ந மம 

மாலையில் கூற வேண்டிய 
அக்னிஹோத்ர மந்திரம் 
சூர்யாய ஸ்வாகா
சூர்யாய இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாகா 
பிரஜாபதயே இதம் ந மம 

அப்படி செய்து முடித்தப் பின் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.ஹோமம் முடிந்தது. வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை. அதன் பலன் பத்தே நாட்களில் தெரியத் துவங்கும் என்கிறார்கள். வீடு அமைதியாக உள்ள உணர்வு ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் செய்யும் காரியங்கள் தடங்கல் இன்றி நடக்கும்.


போபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும்

வேதம் கூறும் யக்ஞத்தை மேலை நாடுகள் விஞ்ஞான பூர்வமாக ஆர்வத்துடன் ஆராய ஆரம்பித்து வெகு காலமாயிற்று. அந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களை வியக்க வைத்தன. ஆனால் வெளி உலகிற்கு அதிகமாகத் தெரியாத இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்தியாவில் 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி நடந்த கோர விபத்தினால் வெளி வந்து பிரபலமாகி அக்னிஹோத்ரத்தின் மகிமையை அதிகமாகப் பரப்பின.

யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த MIC விஷ வாயு அந்த டிசம்பர் இரவில் ஏராளமானோரை பலி வாங்கியது.

ஆனால் சோஹன்லால் குஷ்வாஹா என்பவர் தன் வீட்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்த போது அவர் மனைவி உடனடியாக அக்னி ஹோத்ரம் செய்யச் சொன்னார். சோஹன்லால் அக்னிஹோத்ரம் செய்யவே அவர் வாந்தி நின்றது. விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இருபதே நிமிடங்களில் சுற்றுப்புறம் முழுவதும் விஷம் அகன்றது!

எம்.எல்.ரதோர் என்பவர்  ஐந்து வருடங்களாக அக்னிஹோத்ரம் செய்து வருபவர். அவரும் அதே நள்ளிரவில் எழுந்த ஓலக்குரல்களையும் அழுகுரல்களையும் கேட்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சு வாயுவினால் ஏராளமானோர் இறந்ததைக் கேட்டார். உடனே த்ரயம்பக் யக்ஞத்தை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம். அவர் வீட்டில் விஷப் புகை நுழையவில்லை; அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எந்த விதமான விஷ பாதிப்புமின்றி நலமுற இருந்தனர்.

வர்ஜீனியா ஆராய்ச்சி: 

யூனியன் கார்பைடு நிறுவனம் இந்த ‘ஹோம எபெக்டைப்’ பற்றிக் கேள்விப்பட்டது. வெஸ்ட் வர்ஜீனியாவில் உள்ள அதன் தலைமையகத்தில் இதைப் பற்றி ஆராய உத்தரவிட்டதோடு லட்சக்கணக்கான டாலர்களையும் ஆராய்ச்சிக்காகத் தந்து உதவியது.

விஞ்ஞானிகள் அக்னிஹோத்ரத்தின் நல் விளைவுகளை ஆராய ஆரம்பித்தனர்.

ஏற்கனவே அக்னிஹோத்ரம் பற்றி விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்த பாரி ரத்னரின் முடிவுகளை இந்த விஞ்ஞானிகளும் உறுதிப் படுத்தினர்.

அக்னிஹோத்ர பயன்கள்

ரத்னர் அக்னிஹோத்ரத்தின் பயன்களாக பல விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்:

ரணமாகி இருக்கும் வளி மண்டலத்தை அக்னிஹோத்ரம் சீராக்குகிறது.

வளிமண்டலத்திற்கு உறுதியான ஊட்டச்சத்தை அக்னிஹோத்ரம் அள்ளித் தருகிறது.

அக்னிஹோத்ரம் தாவரங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறது; பறவைகளைச் சந்தோஷமடையச் செய்கிறது.இயற்கையில் உள்ள ஆக்ஸிஜன் மறு சுழற்சிச் சுழலை லயத்துடன் இருக்கச் செய்ய உதவுகிறது. நீர் நிலைகளில் சூரிய ஒளியை நன்றாக உறிஞ்ச வழி வகை செய்கிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல மருந்துகளைத் தயாரிக்க முடிகிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல பயிர்களை விளைவிக்க முடிகிறது. அக்னிஹோத்ரம் விஷத்தை முறிக்கும் அருமருந்தாக இருக்கிறது!

வேதம் கூறும் விஞ்ஞானம்

வேதம் கூறும் பயோ எனர்ஜி விஞ்ஞானம் பிரபஞ்சத்தில் கோடானுகோடி சூரிய மண்டலங்கள் உள்ளது என்றும் அதில் நமது சூரிய மண்டலத்தில் உள்ள பூமியைப் போல அரிதான ஒன்று இல்லை என்றும் கூறி மனிதனின் பிராண சக்தியை வளர்ப்பது யக்ஞங்களே ஆகும் என்று கூறுகிறது.

பல நாடுகளிலும் பரவி வரும் அக்னிஹோத்ரம்


ரத்னர் மேற்கு ஜெர்மனியில் ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாகக் கூறினார்.

No comments:

Post a Comment