Sunday 30 June 2013

நாட்டு பசுக்கள் ஏன் முக்கியம்?

நாட்டு பசுக்கள் ஏன் முக்கியம்?

நாட்டு பசுக்களை பேணுவதற்கு நம் வரலாறு, ஆன்மிகம் முதல் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தர்க்க ரீதியான கோணத்தில் இரண்டு மிக முக்கிய விஷயங்களை முன் வைக்கலாம்.

உணவு: சாத்வீகமான உணவு. ஒழுக்கமும், அறிவும் கொடுத்து சமூகத்தை நிலையாக வைக்கக்கூடிய குணத்தை கொடுக்கும் உணவு. நோய் வராமலும் வந்த நோயை குணப்படுத்த பல நொறு மருந்துகளுக்கு மூல பொருளாகவும் நாட்டு பசுவின் பால் முதல் சிறுநீர் வரை அனைத்தும் பயன்படுகிறது.

நுண்ணுயிர்கள்: செடிகொடிகள் வரை மனிதர்கள் வரை ஒரு நாட்டின் அனைத்து உயிர்களிலும் நுண்ணுயிர்களே உயிரியல் செயல்பாட்டை நடத்துகின்றன. அந்த நுண்ணுயிர்களின் உற்பத்தி மூலம் நாட்டு பசுக்களே.
நாட்டு பசுக்கள் இல்லாமல் சனாதன – தன்னிறைவு பெற்ற வாழ்க்கை சாத்தியமில்லை. உழவுக்கு மழை போல, பசு இல்லாவிடினும் மண் தன் உயிரை இழக்கும். விவசாயம், உணவு, மருந்து, சமூகம் என அனைத்திலும் பசுவின் தாக்கம் அளப்பரியது. எனவேதான், எந்த மிருகத்துக்கும் இல்லாத அளவு பசுவை கோமாதா என வணங்கி போற்றி  பேணுகிறோம்!


முக்கிய குறிப்பு: பால் என்றால் பால் மூலம் பெறப்படும் பொருட்கள். பாலை நேரடியாக ஜீரணிக்கும் சக்தி குழந்தைகளுக்கு 3 வயது வரை மட்டுமே உண்டு. பெரியவர்களுக்கு மோர் தான் சிறந்த உணவு. பாலின் கொழுப்பு பாலாகவோ, தயிராகவோ உடலில் சேர்வதை விட பஞ்சகர்ண சுத்தி என்று சொல்லப்படும் மோர் கடைந்து வெண்ணெய் எடுத்து உருக்கி செய்யப்படும் நெய்யின் மூலம் சேர்வதே சிறந்தது. இதனால் தான் பாளை நேரடியாக அரைத்து எடுக்கப்படும் நெய் உடலுக்கு அவ்வளவு நல்லதில்லை எனப்படுகிறது.

No comments:

Post a Comment