Thursday 27 June 2013

சீமை மாடுகள் என்னும் நோய்மூலம்

சீமை மாடுகள் என்னும் நோய்மூலம்




சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை மாட்டு பாலும் நாட்டு பசும பாலும் பார்க்க ஒன்று போல இருந்தாலும் இரண்டிலும் பெரும் வித்தியாசங்கள் உண்டு. பாலின் முக்கிய அங்கமான பால் புரதமானது (Milk Protein) நாட்டு பசுவில்  A2 Beta-Casein ஆகவும் சீமை மாடுகளில் (பன்றிகளில்) A1 Beta-Casein ஆகவும் மாறுபடுகிறது. A1 Beta-Casein புரதம் மிகவும் அபாயகமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்போது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். சீமை மாடுளின் மரபணுவே இப்படி இருக்க, அதற்க்கு போடப்படும் ஹார்மோன் ஊசிகள் மற்றும் பால் கரவைக்கு வைக்கப்படும் தீவனங்களில் கலக்கப்படும் தவறான வஸ்துக்கள் போன்றவற்றால் சீமை மாட்டு பால் அருந்த தகுதியற்றதாகிறது.





சீமை மாட்டு பால் ஸ்லோ பாய்சன் (Slow Poison) போல. அதன் பாதிப்புக்கள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டுக்கு வந்த புதிதில் சரிசமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டு பசுக்களின் தாக்கம் சரிவிகிதமாக இருந்தது. அதனால் அன்றைய காலகட்டங்களில் தெரியவில்லை. ஆனால் தற்போது சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியாதி பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.



சர்க்கரை நோய்
வெளிநாடுகளில் A2 பால் என்றே தனித்துவமாக பால் வியாபாரம் நடக்கிறது. இந்த A1 Beta-Casein புரதமானது நம் உடலின் இன்சுலின் சுரப்பியின் புரதத்தை ஒத்திருப்பதால் ஹார்மோன் சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ந்த தடுமாற்றம் சர்க்கரை நோயை வரவழைக்கிறது. நாட்டு பசுவின் பால் இதுபோன்ற எந்த தீங்கையும் உருவாக்குவதில்லை.




பிரசர்
சீமை மாடுகளுக்கு உடலில் வியர்வை சுரப்பி கிடையாது. அதன் கெட்ட நீர் மற்றும் உப்புக்கள் மூத்திரம் மற்றும் பாலின் வழியாக மட்டுமே வெளியேறியாக வேண்டும். சீமை மாடுளினால், அது உண்ணும முரட்டு தீனிக்கும்-மாட்டு தீவனத்தில் அதிக பால் கறவைக்கு சேர்க்கபட்டிருக்கும் வஸ்துக்களுக்கும்அத்தனை உப்பையும் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிட இயலாது. உடலின் உப்பும், கெட்ட நீர்களும் பாலின் வழியாக வெளியேறும். அதனால் தான் சீமை மாட்டு பால் கொஞ்சம் உப்புச்சுவை கூடுதலாக இருக்கும். நாளடைவில் இந்த தீய உப்பின் தேக்கத்தால் உடலில் ரத்தகொதிப்பு நோய் ஏற்ப்பட்டு விடுகிறது. நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற நாட்டு பசுவுக்கு உடல் எல்லாம் வியர்வை சுரப்பி உண்டு. அதுவுமன்றி அவை குறைந்த அளவே தீவனம் எடுக்கும். அதனால் அதன் பால் எவ்வித தீங்குகளையும் எர்ப்படுத்துவதில்லை.




ஆட்டிசம்



பல நூறு ஆண்டுகளாக நாம் அதிகம் கேட்டிராத நோய் ஆட்டிசம் (சதை பிறழ்வு). இது குழந்தைகளின் உடலையும் மூளையையும் ஒரு சேர தாக்கும் கொடூர நோய். தற்போது மாநகரங்களில் இந்நோய்க்கென தனியே மருத்துவமனை கட்டும் அளவு பெருகியதன் காரணம் என்ன..? சீமை மாட்டு A1 பால் இந்நோய்க்கான மிக முக்கிய காரணி. சீமை மாடுகள் நம் நாட்டுக்குள் வந்த பின்னர்தான் இந்நோயின் வளர்ச்சி அதிகமாகி வருகிறது. நாட்டு பசுவின் பால் நல்ல புத்தியையும், சூட்டிப்பையும், நரம்பு மண்டலத்துக்கு பலத்தையும் கொடுக்க வல்லது.




ஹார்மோன் சீர்கேடு
வெளிநாட்டு சீதோஷ்ண நிலைக்குரிய சீமை மாட்டு பால் நம் நாட்டில் பயன்படுத்தும்போது உடலின் ஹார்மோன் சமநிலையை தடுமாற செய்கிறது. இதன் தாக்கம் பிட்டியுட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புக்கள், புத்தி, மனோ நிலை அனைத்தையும் தடுமாற செய்கிறது. நாட்டு பசுக்கள் நம் மண்ணுக்கேற்ற தன்மையோடு இயற்கையோடு இயைந்த உடல்வாகு உடையதால் தடுமாறிய ஹோர்மன் சமநிலையைகூட சரி செய்ய கூடியது.




பரம்பரை வியாதிகள்-மரபணு கோளாறுகள்:\
சீமை மாடுகளின் பால் மூலக்கூறுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுவதால் மரபணுவாகிய குரோமோசோம் சங்கிலியில் பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. எனவே இதன் பாதிப்பு நமக்கு தெரியாவிட்டாலும் நம் பிள்ளைகளுக்கோ-பேரன் பேத்திகளுக்கோ நிச்சயம் தெரியும். அதுவும் இது மரபணு மூலமாக பரம்பரை வியாதியாக மாறிவிடும் அபாயம் வெகு அதிகமாகவே உள்ளது.




பாலியல் கோளாறுகள்
சீமை மாடுகளின் உடலில் ஆண்-பெண் செக்ஸ் ஹார்மோன் சமநிலையில் இல்லை. காளைகள் மந்தமானதாகவும் கிடாரிகள்(பெண்) ஹார்மோன் மிகுதியாக உடையதாகவும் உள்ளது. இதை பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு பல வகைகளில் வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய்-கர்ப்பப்பை-பால் சுரப்பு கோளாறுகள் போன்றவை சில.

நாட்டு பசுக்களில் காளை-கிடாரி இரண்டிலுமே செக்ஸ் ஹார்மோன் சமநிலையில் உள்ளது. ஒழுக்கமாக வாழ நாட்டு பசுவின் பாலே சிறந்தது.




மந்த புத்தி
சீமை மாட்டின் பால் தாமச உணவாகும். சோம்பேறித்தனம், மந்தம், அர்த்தமற்ற திடீர் கோபங்கள், எதையும் சடாரென புரிந்து கொள்ளா தன்மை போன்றவற்றை ஏற்ப்படுத்தும். அதன் தன்மையை மீறிய கொழுப்பும், தவறான புரதமும் இந்த பாதிப்பை உண்டாக்குகின்றன. எருமை பாலுக்கும் சீமை மாட்டு பாலுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.


மாறாக,நாட்டு மாடுகளின் பால் சாத்வீகமான உணவாகும். நிதானம், கவனம், சொரணையுள்ள கற்பூர புத்தி, செயல் வீரம் போன்றவற்றை ஏற்ப்படுத்தும்.

# மேலே சொல்லப்பட்டவையன்றி குடல்வால்,மலச்சிக்கல், பார்வை என இன்னும் எண்ணற்ற நோய்களுக்கும் காரணியாக சீமை மாடுகளின் பால் உள்ளது. 

குறிப்பு: பால் என்பது பால் மூலம் பெறப்படும் தயிர் மோர் நெய் உள்ளிட்டவைகளை குறிக்கும். பாளை நேரடியாக ஜீரணிக்க கூடிய சக்தி குழந்தைகளுக்குதான் (மூன்று வயது வரை) உண்டு. மற்றவர்களுக்கு மோரும் நெய்யுமே சிறந்த உணவு. மோரும் நெய்யும் பஞ்சகர்ண சுத்தியின் வாயிலாக பெறப்படுவது.

No comments:

Post a Comment