Friday 14 March 2014

தமிழக சர்க்காரின் அறிவுறுத்தலும் காவல் துறையின் மெத்தன போக்கும்

தமிழக சர்க்காரின் கால்நடைத்துறை 2012 டிசம்பர் மாதத்திலேயே, எல்லா எஸ்பி, கலக்டர் அலுவலகங்களுக்கும் மிருக வதைகள் சட்டம் மற்றும் கால்நடை போக்குவரத்து குறித்த தகவல்களையும், அதை மீறுவோருக்கும், பசுக்களை ஏற்றி செல்லும் வண்டிகளையும் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்குகள் பதிவு செய்ய சொல்லியும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. RoC No: 64816/J2/2012.

பசு ஆர்வலர்கள், அவரவர் மாவட்டத்தில், இதுவரை எத்தனை வழக்குகள் பதிந்துல்லார்கள். எவ்வளவு பசுக்கள் மீட்கப்பட்டன என்பது குறித்து தகவல் பெரும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க வேண்டும். ஏனெனில், ஒரு முறை மாவட்ட துணை கலக்டருக்கே இந்த சட்டங்களின் ஷரத்துக்களை நம் குழு தான் சொல்லித்தந்தது. நிலை இவ்வாறு இருக்க, இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சாமானிய காவலர்களுக்கு இதை பற்றி அறிய வாய்ப்பில்லை. 

இந்த தகவல் நமக்கு மிக சிறந்த ஆயுதமாகும். இதை கொண்டு அரசாங்கத்தை வேளை செய்ய வலியுறுத்தலாம்.



No comments:

Post a Comment